ப்ளஸ் டூ-வில் ஃபர்ஸ்ட்...டென்த்தில் ஃபர்ஸ்ட்.....
''முதல்வர் பாராட்டி ஊக்கத் தொகை கொடுத்தப்போ, இன்னும் நிறைய சாதிக்கணும்னு உறுதி வந்தது!'' - திக்கித் திணறிய வார்த்தைகளில் தங்களின் சந்தோஷம் பகிர்கிறார்கள் சுபாஷினி, வர்ஷா சகோதரிகள்! மிகவும் வறுமையான குடும் பத்தில் பிறந்திருக்கும் சுபாஷினி, வர்ஷா இருவருக்கும் காது கேட்காது, சரிவரப் பேச முடியாது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் கடினம். ஆனால், இத்தனை இன்னல்களுக்கு இடையிலும்... 'படிக்க முடியும்', 'சாதிக்க முடியும்' என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்த தன்னம்பிக்கை சகோதரிகள்! ஆம்... கடந்த ஆண்டு (2010-11) ப்ளஸ் டூ அரசுப் பொதுத்தேர்வில் சுபாஷினி 942/1000 மதிப்பெண் பெற்று, செவித்திறன் குறைபாடு உடையோர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவருடைய தங்கை வர்ஷா, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 381/400 மதிப்பெண் பெற்று, இதே. . .