வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
அஸ்தம், கன்னி ராசியில் முழுமையாகப் பரவியிருக்கும் நட்சத்திரம். ராசிக்கு அதிபதி புதன். ஆனாலும் அம்சகத்தில் நான்கு பாதங்களில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரின் தொடர்பும் இருக்கும். செவ்வாயின் சுறுசுறுப்பும், சுக்கிரனின் உலகவியலும், புதனின் பகுத்தறிவும், சந்திரனின் மனோதிடமும் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும். ராசிக்கு அதிபதியும் அதேசமயம் 3-வது பாதத்துக்கு அதிபதியும் புதனுக்கு இருப்பதால் சுறுசுறுப்பும் உலகவியலும் மனோதிடத்துடன் இணைந்து பகுத்தறிவை நிறைவாக்கி அறிஞனாக மிளிரவைக்கும். பிறந்த குழந்தை குருவின் பங்கில் விளைந்ததா அல்லது சந்திரனின் பங்கு காரணமா என்ற கேள்விக்கு, விடை காணாமல் தவித்த வேளையில், 'நான் சந்திரனின் பங்கில் உருப்பெற்றவன்’ என்று குழந்தை தீர்ப்புக் கூறியது. ஆச்சரியத்தில் ஆழ்ந்த சந்திரன், குழந்தையை 'புத:’ (அறிவாளி) என்று முதுகில் தட்டிக் கொடுத் துப் பாராட்டினான் என்கிற தகவல் உண்டு. இங்கே... கதை விஷயமில்லை. தனது பிறப்பின் ரகசியத்தை அறியும் அளவுக்கு குழந்தைப் பருவத்திலேயே சிந்தனை யின் நிறைவை எட்டியவன். . .