பழைய தெய்வப் படங்களை கோயிலில் சேர்க்கலாமா? 'வேதத்தின்படி திருமணம் என்பது பாணிக்ரஹணம் மட்டுமே. அதேபோன்று, திருமண முகூர்த்தமும் பாணிக்ரஹணத்துக்கே அன்றி, தாலி கட்டுவதற்காக அல்ல! காலில் மெட்டி, கையில் மோதிரம், கழுத்தில் தாலி அனைத்தும் வேதப்படி ஏற்பட்டது அல்ல’ என்கிறார்களே, சரியா? - மாணிக்கவாசகம், மதுரை வேதக் கருத்தையும், அது சொல்லும் பண்பாட்டையும் முற்றிலும் அறியாதவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். வேதம், பண்பாடு என்பதில் பிடிப்பில்லாதவன், அதன் பெருமை பேசப்படுவதைப் பொறுக்க இயலாமல், தாழ்வு மனப்பான்மையை மறைக்க எதிர்வாதத்தைக் கிளப்பி, தற்காலிகமாக நிம்மதி பெறுவான். ஆனால் அந்த நிம்மதி நிலைக்காது. திரும்பத் திரும்ப அந்தப் பணியில் இறங்குவான். தோற்றுப் போனால் அதில் தன்னை இணைத்துக்கொள்வான். பழைய பண்பாட்டைக் கேலி செய்து தாழ்த்துவது என்பது, தன்னை உயர்த்த உதவும் என்று. . .