கோடி புண்ணியம் தரும் கோதண்டராமர் தரிசனம்!
சைவம் தழைத்தோங்கிய காலம் அது! பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு, செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேர நாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், மன்னருக்குப் பாராட்டு என்று வருகிறபோதெல்லாம், கூத்துக் கட்டி, ஆடிப் பாடுதல் அரங்கேறின. சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அப்படி நடக்கிறபோது, புராணச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே வந்து, இறுதியில் நம் தேசத்து மன்னனும் அந்த குணங்களைக் கொண்டவன்தான் என்று நீதி சொல்கிற, பாராட்டு மழை பொழிகிற விழாக்களும் கேளிக்கைகளும் ஆங்காங்கே நடந்தன. அவற்றில், எந்த மன்னன். . .