எத்தனை பிழைகள் செய்தாலும்...
பெங்களூருவிலிருந்து முல்பாகல் 98 கி.மீ. தூரம்; அங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கூடுமலை. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமகா கணபதி ஆலயத்தை ஏற்கெனவே (சக்தி விகடன் 24.1.12 இதழில்) தரிசித்துவிட்டோம். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு சோமேஸ்வரர்- அருள்மிகு க்ஷமதாம்பிகை திருக்கோயில். கூடுமலை மகா கணபதி பழைமையானவர் என்றாலும், அவருக்கு விஜயநகரப் பேரரசர்கள் கோயில் எழுப்புவதற்கு முன்பே, சோழ மன்னர்கள் கட்டிய சிவாலயமாம் இது. மேலும், அஸ்திவாரம் தோண்டாமல் ஒரு பாறையின் மீது எழுப்பப்பட்ட ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது! பேளூர் மற்றும் ஹளபேடு ஆலயங்களைச் சிற்ப அற்புதங்களுடன் எழுப்பிய சிற்பிகளில் ஜகனாச்சாரி என்பவர் இந்த சோமேஸ்வரர் திருக்கோயிலின் பாதியைக் கட்டிமுடிக்க, மீதி திருப்பணிகளை அவரின் மகனான சிற்பி. . .