வேண்டும் விழிப்பு உணர்வு! ''இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே சிறுநீரகத் தானம் கிடைக்கிறது. ஏனையோருக்கு டயாலிசிஸ்தான் வழி. ஆனால், டயாலிசிஸ் செய்துகொள்ள மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் எல்லோருக்கும் இது சாத்தியம் இல்லை. இந்தப் பிரச்னையைத் தடுக்க, அரசே இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்'' என்றார் டாக்டர் சௌந்தர்ராஜன். கடந்த மார்ச் 8-ம் தேதி உலகச் சிறுநீரகத் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார்... ''சிறுநீரகப் பாதிப்புகளை முன்கூட்டியே பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். தொடக்க நிலையிலேயே சுதாரித்தால், சிறுநீரகம் செயல் இழக்கும் அளவுக்குப் போகாது. இந்த விழிப்பு உணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். அதேபோல், எந்தப் பயமும் இன்றி சிறுநீரகத் தானம் அளிக்கலாம் என்ற விழிப்பு உணர்வையும் மக்களிடம் உண்டாக்க வேண்டும். அப்போதுதான் லட்சக்கணக்கான சிறுநீரக. . .