சரணடைந்தால்... சங்கடங்கள் இல்லை
மகாவிஷ்ணு யாழ் வடிவாகி ஈசனை வழிபட்ட திருத்தலம், தேவேந்திரனுக்கு சிவநடனம் கிடைக்கப்பெற்ற க்ஷேத்திரம், அம்பாள்- ஸ்வாமி சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீசனி பகவான் சந்நிதி கொண்டிருக்கும் விசேஷ திருவிடம்... எல்லாவற்றுக்கும் மேலாக தன்னைச் சார்ந்தோரைக் காக்கும் சாமியாக பரமேஸ்வரன் அருளும் திருவூர்- தில்லையாடி! நாகை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது தில்லையாடி. இங்கே, ஸ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசரணாகரட்சகர்! விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரர், திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்துகொண்டிருந்தார் அந்த மந்திரி. சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே மந்திரியை அழைத்து, தில்லையாடி கோயிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன்,. . .
கோவில் 5000 ஆண்டு பழமை?? பிழை என்று நினைக்கிறேன்!!