செந்தில் நாதனை பணிந்திட... செவ்வாய் தோஷம் விலகிடும்!
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது தேனிமலை கிராமம். புதுக்கோட்டை தொண்டமான் அரச குடும்பத்தாரால் கட்டப்பட்ட அழகிய முருகன் கோயில் இங்குதான் உள்ளது. சிறிய கிராமத்தில், சிறியதொரு மலையில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் பொருளும் தந்துகொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இந்தத் தலத்தில் இவரின் திருநாமம் - ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும் பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில், ஓரை காலத்தில் இங்கு வந்து, ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு, மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை. . .