ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?
'நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துல இருந்து பேசுறோம். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பை வெச்சிக்கிட்டு மக்களை ஏமாத்துறாங்க... விசாரிங்க’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது. புகார் சொல்லியிருந்த ராசிபுரத்தைச் சேர்ந்த புகழேந்தியை முதலில் சந்தித்தோம். ''சில மாதங்களுக்கு முன்பு 'நண்பர்கள் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு விளம்பரம் வந்தது. '10,865 ரூபாய் கட்டி வேலைக்குச் சேர்ந்தால், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம். கல்வித் தகுதி, வயது வரம்பு எதுவும் தேவை இல்லை’ என்று இருந்தது. நானும் ஆசையுடன் அங்கே போனேன். வாரத்தில் மூன்று நாட்கள் ஃபீல்ட் வொர்க். கிராமம் கிராமமாகச் சென்று ஏழைக் குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்திக்க வேண்டும். 'உங்கள் கிராமத்தில் தினமும் டியூஷன் எடுப்போம். ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கு மெடிக்கல். . .