வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
அன்புமிக்க வாசகப் பெருமக்களே... 'தானே’ புயல் நிவாரணத் திட்டத்துக்காக விகடன் குழுமம் விறுவிறுப்பாகக் களப் பணியாற்றிவருவதை, விகடன் குழும இதழ்கள் வாயிலாகவும் www.vikatan.com/thane வலைதளம் வாயிலாகவும் உங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்துவருகிறோம். விகடனோடு கைகோத்து இந்த நிவாரணப் பணிகளுக்கு வாசகர்களாகிய நீங்கள் உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளித்துவருகிறீர்கள். மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி உங்களிடம் இருந்து எங்களுக்கு வந்திருக்கும் மொத்த நிதி 1,09,25,315. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆன்லைன்/ஆர்.டி.ஜி.எஸ். மூலம் வங்கிக் கணக்கில் நிதியை அனுப்பிய வாசகர்களில் இன்னும் பலர் தங்கள் விவரங்களை அளிக்கவில்லை. அவ்வாறு விவரம் பெறப்படாத வாசகர்கள் அனுப்பியுள்ள தொகை 19,96,005. மேற்கண்ட வாசகர்கள், உடனடியாகத் தங்கள் தொடர்பான விவரங்களைக் கீழே அளித்துள்ள படிவத்தில் நிரப்பி தபால் மூலமோ அல்லது thane@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டுகிறோம். இதற்கான ரசீதை எங்களிடம் இருந்து பெற்று, 2011-12ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிவிலக்கையும். . .