கிரெடிட் கார்டு...பாய்சனா... பாயசமா?
கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்ய முடியும், காய்கறி வெட்ட முடியும், கொலையும் செய்ய முடியும். கத்தி யார் கையில் இருக்கிறது என்பதுதான் விஷயமே. அதேபோலத்தான் கிரெடிட் கார்டும். இதைப் பயன்படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும். சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்... அதைப்போல மோசமான 'ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா மல், பாயசமாக்கும் கலையை உங்கள் வசமாக்கும்! கிரெடிட் கார்டு எதற்கு? கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.. . .
மீதமுள்ள 47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும்.
Interest will be levied for the entire outstanding amount. Not just for the amount remaining after you paid the minimum amount due. In this case bank will levy interest for the full amount i.e Rs 50000.00. Not just for Rs. 47500.00. If I am wrong, please tell me one bank that charge interest only for the balance amount after paying the minimum amount due.