என்ன அழகு... எத்தனை அழகு !
கோடை வந்து விட்டால்... சருமப் பாதுகாப்புக்கு பெண்கள் ரொம்பவே மெனெக்கெடுவார்கள். நிறைய தண்ணீர், பழங்கள்... இவைதான் கோடைக்குக் கவசம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். குறிப்பாக, பழங்கள் முகப்பொலிவுக்கு சிறந்த உபகரணம். கிவி, பப்பாளி, மாம்பழம் என்று சீஸன் பழங்களை வைத்தே சருமப் பாதுகாப்பு பெறலாம். கோடையில் மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டே முகப்பொலிவைப் பெறுவது பற்றி இங்கே பார்ப்போமா! வைட்டமின் 'ஏ’ மற்றும் பவர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், கோடை வெயிலில் இருந்து சருமத்தைக் காத்து, பூரண புதுப்பொலிவு கொடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எண்ணெய்ப் பசையை சமன் செய்வதோடு, முகத்தில் வறட்சியை விரட்டும் வித்தையும் அதனிடம் உண்டு. இத்தனை அம்சங்கள் கொண்ட மாம்பழத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஸ்டெப் கொண்ட 'மேங்கோ சம்மர் ஸ்கின். . .