சுந்தர ராமசாமி: ஒளியில் வழியும் படிமம் புதுவை இளவேனில் - அரவிந்தன் பக்கம்: 48 விலை 200 வெளியீடு: கன்டென்ட் ஃபேக்டரி, பி1, ஆர்.இ.அபார்ட்மென்ட்ஸ், 70, ஆர்யகவுடா ரோடு, சென்னை-33. சுந்தர ராமசாமி என்கிற ஆளுமையை புதுவை இளவேனில் கறுப்பு - வெள்ளைப் படங்களுக்குள் செய்த பதிவு இப்போது புத்தகமாக. ஒவ்வொரு புகைப்படத்தையட்டியும் கவிதைபோல சு.ரா-வின் இலக்கிய வீச்சுகொண்ட வரிகள் பக்கங்களை அலங்கரிக் கின்றன. ஏகாந்த வெளியில் கைகளை இட வலமாக விரித்துப் புன்னகைக்கும் சு.ரா. புகைப்படத்தின் மேற்பரப்பில் 'எனினும் என்னை வெல்ல யாருண்டு? எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்?’ என்ற வரிகள்... அடடா! எவ்வளவு பொருத்தம். இவ்வளவு சிறப்பான புத்தகத்துக்குச் சற்றே உறுத்தலாக எழுத்துப் பிழைகள். அடுத்த பதிப்பில் அவசியம் தவிர்த்துவிடுங்கள் இளவேனில்! ஆயிரம் முத்தங்களுடன்... தேன்மொழி இசை: தாஜ்நூர் வெளியீடு: வீனஸ் விலை: 99 மெட்டுக்கள் பழசு என்றாலும் குரல்கள் புதுசு. 'சத்தம். . .