''என் அண்ணனின் மகள், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே அவள் அத்தனை புத்திசாலி, சமர்த்து. ஒவ்வொரு விஷயத்தையும் அவள் அணுகும், அலசும், முடிவெடுக்கும் விதத்தில் பலமுறை எங்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறாள். எனவே, அவள் விஷயத்தில் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை. இந்நிலையில், 'என்னுடன் படிக்கும் ஒரு மாணவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவனையே திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று சமீபத்தில் மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டு, வழக்கமான படிப்பில் அவள் பிஸியாக... குடும்பமோ கலங்கிப் போயிருக்கிறது. அவளது பிரியத்துக்குரிய அத்தையான என்னிடம் பிரச்னையை ஹேண்டில் செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். ஒளிவுமறைவில்லாத 14 வயது இன்டலக்சுவல் சிறுமி, 'காதல்' என்ற பெயரில் எடுத்திருக்கும் முடிவை எப்படி மாற்ற முடியும்?'' என்று ஓசூரைச் சேர்ந்த வாசகி ஒருவர் பதற்றத்துடன் கேட்டிருக்கிறார்.. . .
உஷாவின் கருத்தும், என் கருத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், பெற்றோர் குழந்தைகளிடம் கனிவான அனுகுமுறையில் பழகவேண்டும். அதையும் மீறினால் அடி பிண்ணிடவேண்டியதுதான். ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது... இங்கு பிரச்னை அடியைப்பற்றியது அல்ல. புரிந்துணர்வு பற்றியது... அதாவது தும்பை விட்டுவிட்டு இப்பொழுது வாலைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்... நீங்களே சொல்லுங்கள், மயிலே, மயிலேன்னா இறகு போடுமா?... ஒரு பொறுப்பான பெற்றோர் ஸ்தானத்திலிருந்து இப்பிரச்னையைப்பாருங்கள், புரியும்...