# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count7
save
print A+     A-
உறவு...நல்ல வரவு !

''இன்றைய நாகரிக உலகின் குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் அங்கிளாகவும், பெண்கள் அனைவரையும் ஆன்ட்டியாகவுமே அறிகிறார் கள். சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என்ற உறவுகள் எல்லாம் தெரியாம லேயே வளர்கிறார்கள். பணத் தையே பிரதானமாக நினைக்கும் அவர்களின் 21-ம் நூற்றாண்டுப் பெற்றோருக்குப் புரியவில்லை... உறவுகளை சேமிப்பதே அவர்களை நல்ல மனிதர்களாக வளர்க்கும் என்பது!'' - அக்கறையும், வேதனையும் கலந்திருந்தன மனநல மருத்துவர் கீதாஞ்சலியின் வார்த்தைகளில். ''கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, அனைவரும் அவ    ரவர்களின் வேர்களில் இருந்து பிரிந்து தீவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அன்பையும், அவசியத்தையும் தடுக்கிறது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணம். விளைவு, 'அவங்க இல்லாம நான் வாழ முடியாதா..? எனக்கு யாரும் தேவைஇல்லை’ என்கிற தப்பான நம்பிக்கையை வளர்க்கிறார்கள். இன்னொரு பக்கம், சுழற்றி அடிக்கும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
usha1 Years ago
தாமரை கூட்டு குடும்பத்தை இப்போது யாரும் விரும்புவதில்லை{லைக்கே அதிகம் இல்லை பாருங்க}அதில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் சுகம் புரியும்...மேலும் நீங்கள் விரும்பியது பாராட்டுக்குரியது...
thamarai1 Years ago
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, அனைவரும் அவரவர்களின் வேர்களில் இருந்து பிரிந்து தீவு வாழ்க்கை வாழ்கிறார்கள்... நான் விரும்பியது கூட்டுக் குடும்ப வாழ்க்கை, என் திருமணம் அதற்க்கு கொல்லி வைத்துவிட்டது.
mani1 Years ago
விசேஷங்களின் போது நாம் அடிக்கும் அரட்டை குழந்தைகளுக்குப் புரியாது
VIJAYALAKSHMI1 Years ago
அம்மா வழியில் 5சித்தி,4மாமா,4பெரியம்மா அப்பா வழியில் அத்தை, 2பெரியப்பா,2சித்தப்பா மற்றும் அவர்கள் பிள்ளைகள் என வளர்ந்த எனக்கு இன்று என் மகன் ஒருவனாக வளரவது வேதனை தருகிறது. அதனால் கோடை லீவ் 1மாதமும் என் அம்மா அப்பா,தம்பி,சகோதரி வீட்டிற்கு அனுப்பி விடுவேன்
usha1 Years ago
நான் கூட்டு குடும்ப முறையில் வளர்ந்தேன்,கணவர் வீட்டிலும் கூட்டு குடும்பமாக இருந்தேன், இங்கு வந்த பிறகுதான் தனிகுடித்தனம்,மிகவும் மகிழ்சியான நினைவுகளை கொடுத்து கொண்டு இருக்கிறது அந்த நினைவுகள்..பெண்கள் மனது வைத்தால் கூட்டு குடும்ப முறையை மீட்டு எடுக்கலாம்....
Vijayalakshmi1 Years ago
என் தந்தை வழித்தாத்தாவுக்கு 10 குழந்தைகள். அதனால் கிளைகள் பிரிந்து இப்போது நிறைய உறவுகள் இருக்கின்றன.. கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், குழந்தைகளின் முதல் பிறந்த நாள், திருமண நிச்சயதார்த்தம், 60ம் கல்யாணம் என்று வருடத்திற்குக் குறைந்தது 10 விசேஷங்களாவது வரும். தமிழ் நாட்டிலும், பங்களூரு, மும்பையிலும் இருக்கும் பெரும்பாலான உறவினர்கள் குடும்பம் முழுவதுமாக ஆஜராகி விடுவோம். விசேஷங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நாங்கள் கும்பல் கூடி அரட்டை அடிப்பது இருக்கிறதே, சுவாரசியமான கெட் டு கெதராக்கும்.
Ram Prasath1 Years ago
வருடத்துக்கு ஒரு நாள் குலதெய்வ வழிபாடு தினத்தன்று தவறாமல் கூடுங்கள்! குலதெய்வம் இல்லாதவர்கள் ஏற்படுத்திக்கொண்டு தவறாமல் கடைப் பிடியுங்கள்!! எதிர்காலத்தில் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும் உறவினர்களின் உதவி எளிதில் கிடைக்கும்!!
Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
10-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
27-மார்ச் -2012

*Flip Version not supported in Devices