முதல் வணக்கம் முதல்வனுக்கே!
'தக்ஷிண கங்கா காவேரி’ என்று காவிரியின் சிறப்பை, முதலாம் ஆதித்ய சோழனின் திருச்செந்துறைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. வளம் தரும் காவிரி நாடு, பொன்னி நாடு என்றும் அழைக்கப் பட்டது. காவிரி முக்கோண வடிவில் கடலோடு கலக்கும் பகுதியை, 'டெல்டா’ என்று குறிப்பிடுவர். வடமொழியில் இதனைக் 'கோண மண்டலம் என்பார்கள். சோழ தேசம் முக்கோண வடிவில் ஒரு குடம் போன்று அமைந்து, அந்தக் குடத்தின் மூக்கு (நுனியில்) பகுதியில் உள்ள நகரம் குடமூக்கு என்று பெயர் பெற்றது. அப்படி குடமூக்கு, குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், 13-ம் நூற்றாண்டில்- விஜயநகர அரசர்கள் காலத்தில் கும்பகோணம் என அழைக்கப்படலாயிற்று. இந்தத் திருநகர் கோயில்கள் நிறைந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலகப் புகழ் பெற்றது. தேவார. . .