திருப்பட்டூர் அற்புதங்கள்!
'சின்ன வயசுலேருந்தே ஆன்மிகத்துலயும் அரசியல்லயும் ரொம்பவே ஈடுபாடு உண்டு எனக்கு. கோயிலுக்குப் போறதும், வீட்ல பூஜை பண்றதும், பண்டிகை- திருவிழான்னா உறவுகளைக் கூட்டி உற்சாகமா கொண்டாடறதுமா இருக்கிறவ நான். தொடர்ந்து எங்க கிராமத்துல நான் நல்ல பேர் எடுத்திருந்தாலும், அரசியல்ல மட்டும் ஜெயிக்க முடியாமல் ஒரு வெற்றிடம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த வெற்றிடத்தை நிரப்பி, எனக்கும் என் குடும்பத்துக்கும் வெற்றியைத் தந்தது திருப்பட்டூர் பிரம்மாதான்!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் செல்வமணி கந்தசாமி. கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில் உள்ளது இறையூர் எனும் கிராமம். இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார் செல்வமணி. ''படைப்புத் தொழிலையே இழந்துட்டுத் தவிச்ச பிரம்மா வுக்கு திரும்பவும் வரம் தந்து, இழந்த பதவியைத் தந்தார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர். அந்த பிரம்மாதான், எனக்கு இந்தப். . .
வாழ்க உங்கள் திருப்பணி - சாய் செந்தில்