கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
'நெல்லிக்கனி, நாவற்கனி, மாங்கனி, ஆப்பிள்... இந்தப் பழ வகைகளைக் கேட்டதும் சட்டுனு உங்களுக்கு என்ன நினைவுக்கு வருது?' என்ற கேள்வியோடு, அன்றைய வகுப்பைத் தொடங்கினேன். 'நெல்லிக்கனி - ஒளவையார், அதியமான்' என்றாள் ஒரு மாணவி. 'நாவற்கனி - ஒளவையார், முருகன்!' - இது ஒரு மாணவர். 'மாங்கனி - விநாயகரும் முருகனும் உலகத் தைச் சுற்றிய போட்டி' என்று ஒரு மாணவர் சொல்லவும், 'காரைக்கால் அம்மையாரையும் சேர்த்துக்கொள்ளலாம்' என்றாள் ஒரு மாணவி. உடனே, ''சரி... ஆப்பிள்?'' என்று கேட்டேன். 'அது நம்ம நாட்டுப் பழமே இல்ல சார்!' என்றார் ஒரு மாணவர். 'சரி, அப்படியானால் ஆப்பிளை கடைசியாகப் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்... 'நெல்லிக்கனிக்கு ஒரு பழமொழியும் உண்டு. 'மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர். . .