ஒன்பது நதிகளை வணங்குங்கள்!
முன்னொரு காலத்தில், குடமூக்கு என அழைக்கப்பட்ட நகரம், கும்பகோணம். பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். கி.பி.9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமாரி, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பதும் புண்ணிய நதிகள். இவர்களுக்கு ஒரு கவலை. மக்கள் தங்களின் பாவங்களை நம்மிடம் சேர்க்கிறார்கள். அந்தப் பாவங்களை நாம் எங்கு தொலைப்பது எனப் புரியாமல் வருந்தின. அதற்கான தீர்வு வேண்டி ஒன்பது நதிகளும் தவமிருந்ததும், ''மகாமக புண்ணிய தினத்தில் குடந்தை மகாமகக் குளத்தில் மூழ்கி, உங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ளுங்கள்’ என அவர்களுக்கு சிவனார் அருளியதும் நாமறிந்த கதையே. அப்படி அந்த நதிகள் தவமிருந்து அருள்பெற்ற தலம்... குடந்தை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக்கோயில்! மகாமக வைபவத்தின்போது,. . .