ஒன்பது திருமஞ்சன தரிசனம்!
சோழ தேசத்தில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள்; எந்தப் பக்கம் திரும்பினாலும் நீர் நிலைகள்! ஆகவே, புதிதாக ஓரிடத்தில் குளம் வெட்டுவதோ, கிணறு அமைப்பதோ மிகப் பெரிய வேலையாக இல்லை. ஆனாலும், அந்த ஊரில் குளம் வெட்டும் பணி ஒன்று நீண்ட நாட்களாக நடந்து வந்தது; தண்ணீர்தான் வந்தபாடில்லை. அனைவருக்கும் ஆச்சரியம். குழப்பம். இதனால் ஒருவித அயர்ச்சியுடனும் சோர்வுடனும் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 'இந்த வேலையை பத்து இடத்துல செஞ்சிருந்தா, பத்து இடத்துலயும் இந்நேரம் தண்ணி வந்திருக்கும்ப்பா!’ என்று பரஸ்பரம் அங்கலாய்த்தபடி, வேலை செய்தனர். அப்போது, ஓரிடத்தில் மண்வெட்டி பூமியில் படும்போது, ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கவே, எல்லோரும் வியப்புற்றார்கள். சுற்றிலும் வேலை செய்தவர்கள் அனைவரும் சத்தம் வந்த இடம் நோக்கி ஓடி வந்தார்கள். பத்துப் பதினைந்து. . .