காசியில் பாதி 'கல்பாத்தி'!
கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு கேரளாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்த பிராமண விதவையான லட்சுமிப் பாட்டி, தன் தள்ளாத வயதில் காசிக்குப் போனார். அங்கிருந்து திரும்பி வரும்போது அவர் ஒரு 'ஜ்யோதிர்’ லிங்கத்தைக் கொண்டு வந்தார். வழியில்... நதிக் கரைகளில் தங்கி, சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பதுமாக இருந்தார். இப்படியாக, பாலக்காடு - கல்பாத்திக்கு வந்தவர், அங்கிருந்த நிலா பாகீரதி ஆற்றங்கரையில் ஜ்யோதிர் லிங்கத்தை வைத்து வழிபட்டார். அங்கு வந்த பொதுமக்களும் வணங்கி வழிபட்டனர். சிலநாட்கள் கழித்து அங்கிருந்து கிளம்பும் வேளையில், அந்த சிவலிங்கம் அசையவே இல்லை. 'இந்த சிவலிங்கம் இருக்கவேண்டிய இடத்தை, அந்த சிவபெருமான் தேர்வு. . .