ஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்!
ஜாம்பவான்- ஸ்ரீராம பக்தர்கள் அனைவருக்கும் பரிச்சயமான பெயர் இது. திரேதா யுகத்தில் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த துவாபர யுகத்திலும் பகவானும் ஜாம்பவானும் சந்தித்துக்கொண்ட சம்பவம் ஒன்று உண்டு. சத்ரஜித் என்றோர் அரசன் இருந்தான். சூரியனின் மீது அபார பக்தி கொண்டவன். அவனுக்கு 'சியமந்தக மணி’ எனும் ஒளி பொருந்திய கல்லைத் தந்திருந்தார் சூரியன். அதைப் பதக்கமாக அணிந்திருந்தான் சத்ரஜித். அந்த மணி இருக்கும் இடத்தில் வளம் பெருகும். ஒருமுறை, இந்த மன்னன் கிருஷ்ணனைப் பார்க்க துவாரகைக்கு வந்தான். அவனிடம், தன் பாட்டனாரான உக்ரசேன மகாராஜாவுக்கு அந்தக் கல்லைக் கொடுத்து, அவரின் தேசமும் மக்களும் சுபிட்சமுடன் திகழ உதவும்படி, கேட்டுக் கொண்டார் கண்ணன். ஆனால், மன்னன் சம்மதிக்கவில்லை. அவன் நாடு திரும்பியபின் ஒருநாள், மன்னனின் தம்பியான ப்ராசேனன், சியமந்தக. . .