பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை!
தோஷங்கள் பல உண்டு. ஒவ்வொரு தோஷமும் ஒவ்வொரு வீரியம் கொண்டது. அந்தத் தோஷங்கள், குறிப்பிட்ட சில விஷயங்களை நம் வாழ்க்கையில் வராதபடி தடுத்துவிடுபவை. முக்கியமாக, எந்தத் தோஷமானாலும் சரி... தோஷத்துக்கு ஆளாகிவிட்டால், நம் வாழ்வின் மொத்த சந்தோஷமும் பறிபோய்விடும்! மூன்றாம் குலோத்துங்க மன்னனும் அப்படியரு தோஷத்தில் சிக்கித் தவித்தான். அது... பிரம்மஹத்தி தோஷம். மிகப் பெரிய ராஜாங்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபரிபாலனம் செய்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தால் மிகவும் அல்லலுற்றான்; அவதிப்பட்டான். சோழ தேசத்தின் தலங்களில் தனக்கு மிகவும் பிடித்த தலமான திருவிடைமருதூருக்குச் சென்று வணங்கினான். கண்ணீர் விட்டுக் கதறினான். அப்போது, 'நதியின் தண்ணீரை சற்றே திருப்பி நிறுத்தி, அருகில் ஆலயத்தைக் கட்டி வழிபடு’ என அசரீரி கேட்டது. 'கோயிலும் நதியும் குடி காக்கும்’ என்பார்கள். ஆகவே, சோழ. . .