'பசுவையும் கன்றையும் பிரதட்சிணம் செய்து பூஜிப்பவர்கள் எல்லா தேவர்களையும் பூஜித்தவர்களாக, எவ்வளவோ நன்மைகளையும் புண்ணியங் களையும் அடைகிறார்கள்’ என்கின்றன ஞான நூல்கள். இதற்கு ஆதாரமாக ராமாயணத்தில் ஒரு சம்பவம். அகல்யையை மணக்க பிரமாண்டத்தை (பேரண்டத்தை) மும்முறை வலம் வர வேண்டும் என்பது நிபந்தனை. தவசீலரான கௌதம மகரிஷி, பிரமாண்டத்தை மூன்று முறை பிரதட்சிணம் செய்வதற்குப் பதில், பசுக்களில் சிறந்த காமதேனுவை மூன்று முறை வலம் வந்து, அகல்யையை மணந்தார். இவ்வாறு கௌதமர் காமதேனுவை மும்முறை வலம் வந்தது, இந்தப் பிரமாண்டத்தையே வலம் வருவதற்கும் மேலானது என்று ஒப்புக்கொண்ட பிரம்மதேவன், ''பசுவின் அங்கங்களில் ஈரேழு லோகங்களும் அடங்கியிருப்பதாக நானே சொல்லியிருக்கிறேன்; காமதேனுவைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ. ஆகவே, அதைச் சுற்றி வந்ததால் பிரமாண்ட பிரதட்சிணம் செய்ததற்கும் மேலானதாயிற்று'' என்றாராம்.. . .