உலக மனிதர்களிடம் சாந்தமும் அமைதியும் ஏற்படுவதற்கு ஐந்து சக்திகள் மிக அவசியம். பக்தி, தைரியம், விஷம் தீண்டாமை, செழிப்பான பூமி, கல்வி ஆகிய ஐந்தும் இருந்தால், அகிலத்தில் நிம்மதிக்குப் பஞ்சமில்லை. அவை அனைத்தையும் தந்தருளும் ஒன்பது ஆஞ்சநேயர்களை ஒரே இடத்தில் தரிசிக்க முடியும் என்பது எத்தனை பெரிய பாக்கியம்! திண்டுக்கல் ராம்நகர் பகுதியில், ஸ்ரீவல்லப மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. மடியில் தேவியை அமர வைத்தபடி, திருமாலிடம் உள்ள சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறார் கணபதி. அருகம்புல், எருக்கம்பூ, வன்னி இலை ஆகியவை கொண்டு இவரை வணங்கினால், எடுத்த காரியம் யாவற்றிலும் வெற்றியைத் தருவார் விநாயகப் பெருமான். இங்கே, ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீசத்யநாராயணர், ஸ்ரீகேதாரீஸ்வரர், ஸ்ரீசண்முகர், ஸ்ரீசந்தான கோபாலன், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீசத்யநாராயணா சேவா டிரஸ்ட் எனும் அமைப்பினரால் அமைக்கப் பட்டுள்ள இந்தக் கோயிலில், ஒன்பது அனுமனையும் ஒருசேரத் தரிசிக்கலாம். ஸ்ரீபால மாருதி, ஸ்ரீயோக மாருதி,. . .