சண்முகப்பெருமானைத் தியானிக்க அவர் கையில் இருக்கும் வேலாயுதமும் நம் நினைவுக்கு வரும். வல்வினைகள் யாவற்றையும் நீக்கவல்லது முருகன் கை வேலாயுதம். அசுரனாம் சூரபதுமனையே ஆட்கொண்ட ஆயுதம் அல்லவா சக்திவேல். ஆம்... வேலாயுதம் சாட்சாத் ஆதிசக்தியின் அம்சம். சிக்கல் திருத்தலத்தில் முருகன் சக்தி வேல் பெற்ற கதையும், சக்திவேலை கொண்டிருப்பதாலேயே முருகனை ஞான சக்திதரர் என ஞான நூல்கள் போற்றுவதுமே அதற்குச் சான்று. ஆக, வேலாயுதத்தைத் துதித்து வழிபட, வேலவனை யும் அவன் தாய் ஆதிசக்தியையும் சேர்த்து வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீஆதிசங்கரர் மிக அற்புதமான ஸ்லோகம் ஒன்றை அருளியிருக்கிறார். அந்த ஸ்லோகம்... ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம் ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம் நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ இதன் பொருள்: ஓ. . .