நான்கு திசைகளிலும் ஒன்பது நிலை கோபுரங்கள்!
மதுரையும் மதுரையின் மையப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீமீனாட்சியம்மையும் வெகு அழகு. குறிப்பாக, அந்த பிரமாண்ட மதிலும் அகண்ட பிராகாரமும் உள்ளே இருக்கிற ஒவ்வொரு மண்டபமும் கோயிலின் புராணத் தொடர்பையும் புராதனச் சிறப்பையும் பறைசாற்றும்! இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பானது, கோயில் கோபுரம்! சிவ மகா புராணம், திருவிளையாடற் புராணம், லிங்க புராணம், ஸ்ரீதேவி மகாத்மியம் ஆகிய அனைத்தும் சின்னச் சின்னச் சிற்பங்களாக, கோபுரத்தில் வடிக்கப்பட்டுள்ளன. மிக நீளமான மதிலுடன் மொத்தம் 12 கோபுரங்கள், மதுரை ஸ்ரீமீனாட்சி அம்பாள் கோயிலில் அமைந்துள்ளன. நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்கள், வெளி கோபுரங்கள் எனப்படும்! அவை, கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் என அழைக்கப்படுகின்றன. கிழக்குக் கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்பர். சடையவர்மன் சுந்தர பாண்டிய. . .