'நான் வாழ்ந்து முடிவதற்குள் 3,000 குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்கணும். குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவே, நானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்’ என்று கனவு கண்ட ஒருவர், கல்லூரி படிக்கும் காலத்திலேயே தூக்கில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார். இவரை கதையைக் கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த தேவராசபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சிறு வயதி லேயே இவரது அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். இதனால் தம்பி மதிவாணனையும், தங்கை சர்மிளாவையும் படிக்கவைப்பதற்காக குழந்தைத் தொழி லாளியாக மாறினார் மணிவண்ணன். கடந்த 2000-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி யராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது, மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். . .