# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count47
save
print A+     A-
கல்லூரி மாணவர் தற்கொலை!

'நான் வாழ்ந்து முடிவதற்குள் 3,000 குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்கணும். குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவே, நானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்’ என்று கனவு கண்ட ஒருவர், கல்லூரி படிக்கும் காலத்திலேயே தூக்கில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார். இவரை கதையைக் கேட்கவே பரிதாபமாக இருக்கிறது.  தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த தேவராசபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சிறு வயதி லேயே இவரது அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். இதனால் தம்பி மதிவாணனையும், தங்கை சர்மிளாவையும் படிக்கவைப்பதற்காக குழந்தைத் தொழி லாளியாக மாறினார் மணிவண்ணன். கடந்த 2000-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி யராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது, மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Arun Janarthanan1 Years ago
அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கல் சிலர் மானவர்களை மிகவும் மோசமாக நடத்தியதை நான் பார்து இருக்கிறேன். அவர்களை பொருத்த மட்டில் மதிப்பென் சரியக எடுக்க முடியாத் அல்லது சில பாடங்களை புரிந்து கொல்ல முடியதவர்கள் மிகவும் கேவலமாக நடத்துவதை. அவர்களில் சிலர். அனைவரும் கனிதவியல் துரை சார்ந்த பேராசிரியர்கள் என்னும் பெயரில் இருக்கும்...
Albert1 Years ago
அட, எதாவது ஈழத்தமிழருக்காக தற்கொலை செய்வதாக எழுதிவைத்துவிட்டு செத்திருந்தால் இன்னேரம் தியாகி ஆகி இருக்கலாமே? பிழைக்கத்தெரியாத பையன் போல இருக்கிறது.
சந்திரா1 Years ago
ஆமாம் நம் கல்வி முறை நம் குழந்தைகளையும் ஏன் நம்மை கூட கொன்று விட்டது. என்ஞினியரிங்கில் குறிப்பாக சிவில் என்ஞினியரிங்கில் நடை முறை வேலைக்கு சம்பந்தமான படிப்புகளே இல்லை. படித்து முடித்து விட்டு சைட்டுக்கு போய் பார்த்தால் . படித்த படிப்பு ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை. எது முக்கியமோ அதை மிகவும் பிராக்டிகலாக சொல்லிக்கொடுக்காமல், வெள்ளைக்கார வெண்ணைகள் எழுதின பல ஆயிரம பக்க உளறல்களை படி படின்னா மாணவன் என்ன செய்வான் தூக்குதான் போட்டுக்குவான். வெள்ளைக்கரனுங்களுக்கு எதையும் சுருக்கமா, விளக்கமா செய்யத்தெரியாது. 1) ஆங்கில மொழி பேச எழுத நன்கு கத்துக்கொடுக்கலாம். 2) பிராக்டிகலாக பாடம் கத்துகொடுகலாம் 3) தியரியை 25% மட்டும் கொடுத்தால் போதும் இது என் அனுபவம்.
srider1 Years ago
ALL THIS ONLY BY THE TORCHER OF PROF IN THIS UNISITY
raghu1 Years ago
He has not chosen the field he wanted.He did not take a decision on his own.Why did he join engineering?He could have joined some other course.Don't blame the education system for the fault done by an individual.
Madras1 Years ago
Great inspirational start with a SAD ending. Mr.Manivannan might have chosen Engg 'cause of peer pressure.
அன்பு1 Years ago
"பாடப் புத்தகம் மீண்டும் ஒரு இளைஞனைக் கிழித்துப் போட்டிருக்கிறது.!"---> புத்தகத்தின் குறை அன்று. மாணவர் விரும்பாத பாடத்தைப் படிக்கக் கட்டாயப்படுத்தியவர்களின் தவறு இது. கிட்டத்தட்ட தோனி படம் போல.
Mangai1 Years ago
இறந்த மாணவரின் மன அழுத்ததுக்கான காரணங்கள் பல இருக்கும். ஆனால் நல்ல மனதுடைய பையன் இறந்தது நாட்டுக்கு நிச்சயம் பெரிய இழப்பு தான். படிக்கும் வயதில் சமூக பணி என்பது ரொம்ப ப்ரஷர் என்று நினைக்கிறேன். படிக்க முடியாத பாடம் என்று கிடையாது. ஒருவருக்கு ஒரு கணக்கை கற்று கொள்ள ஒரு மணி நேரம் ஆகலாம், ஆனால் வேறோருவருக்கு பத்து நிமிடம் போதும். அதனால் புரியலை என்று வருந்தி மன அழுத்தம் கொள்வதை விட, புரியாத பாடத்தை விடிகாலம் எழும்பி தினமும் படித்தால் புரியும். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஜெயிப்பதற்க்கு எளிய வழி கல்வி தான் ஆனால் நல்ல மனம் என்பது அதை விட பெரியது. குழந்தைகள் கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்று ஆதங்கப்படுவதில் தவறில்லை ஆனால் ஆசிரியர்கலும், பெற்றோரும், அவர்களை தைரியசாலியாய் வளரவும் உதவ வேண்டும்.
Sudha1 Years ago
this is not first incident happening there.My husband"s friend also comited sucide few years back,but unfortunately he was rank holder,.cant there be a counselling section for them. cant there be somebody who can they approach first..Parents when are you going to stop forcing your dreams into children"s future..cant they dream what they want to be.
subbiah1 Years ago
வேறென்ன சொல்வது? பாடப் புத்தகம் மீண்டும் ஒரு இளைஞனைக் கிழித்துப் போட்டிருக்கிறது.!
john1 Years ago
Hats off to Chandra and Cavitha. Engineering needs a total revamping, yes more of practical and realistic with applications rather than mere theory. ( If you ask the students they will tell lot of stories about the innocence of their teachers regarding the real world applications)
HRD ministers do not know any thing and the educators want to teach what they have learnt. See the industry relevant education of UK being implemented in middle east countries due to arab upraising.
when our country is going to change? 90% of graduates can not work from the day one in their career and they need further training, if they got selected in the campus placement. why? because there is a big gap between the demand and supply in the quality level.
john1 Years ago
An individual took a wrong decision. If it is not possible to pass the exams leave the course and go where your mind says but it is not correct to blame the system or authorities of Anna University for an individuals mistake.
If he is not able to decide what next? what is the use of his studies and achievements till Plus two exam. Where he went wrong? He has diverted his attention rather than focusing on his studies? Engineering is not the only way to win the bread in this world, it is also a way. That's it. He failed to learn lessons from his mistakes and move to the education in which he can enjoy and excel.

Sorry, it is a mistake of an individual. Let his soul be at rest.
Manithan1 Years ago
24மணி நேரம் கவிதை எழுதுவனுக்கு அங்கு என்ன வேலை..? ஒன்று கலைகல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும்.. இல்லை சினிமாவில் முயன்றிருக்க வேண்டும். இன்னொன்று மாணவர்கள் படிக்கிற காலத்தில் குறிப்பிட்ட மணி நேரம் மாதத்திற்கு மேல் சமூக சேவை செய்தல் கூடாது என்றும், பாஸ் பண்ணாத மாணவர்கள் சமூக சேவை செய்தல் கூடாது என்றும் கட்டளையிடப்படவேண்டும்...
Dr.Mrs.MeenakshiPrabhakar1 Years ago
மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய சம்பவம் இது.

குழந்தை தொழிலாளியாக இருந்திருந்தாலும் தாய்க்கு பிள்ளையாக இருந்திருக்கக் கூடும்.தொழில் கல்வியில் சேர்ந்திருந்தால் தொழில் முனைவோராய் முன்னேறியிருக்கக் கூடும்.

இவர்களை மீட்டெடுத்து குடும்ப சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத ஒயிட் காலர் துறையில் காலூன்ற வைத்தது தவறு.

ஒயிட் காலர் துறைக்கு செல்பவர் என்னிலையிலும் தன்னை மட்டுமே காத்துக் கொள்ள முடியும்.சமூக சிந்தனைக்கு இத்துறையிலிடமில்லை.

அண்ணா பல்கலை கழகம் முற்றிலும் சர்வாதிகார நெருக்கடிகளை தன்னுள் கொண்டது.சிங்கிள் விண்டோ முறை தனி மனித உரிமைக்கு முற்றிலும் ஏற்றதல்ல என்பதை பல நிலைகளிலும் உணர்ந்த பிறகும் , சர்வாதிகார நிலைப்பாட்டிற்காகவே இன்னமும் அந்த முறையை விடாமல், கல்லூரியில் சேர வரும் மாணவர்களை,கல்வி தங்கள் உரிமையாக பெருமையாக கருத விடாது சங்கடங்களுக்கும், அதிர்வுகளுக்கும், தவறான துறை தேர்ந்தெடுக்க செய்யும் நிலைக்கும் தள்ளுகிறது.பனிரண்டு வருடம் படித்த படிப்பிற்கு பின் தான் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்கும் உரிமையை மதிப்பெண் தர வரிசையால் தட்டிப்பறித்து தன் ஆளுமையை நிரூபிக்கிறது நிர்வாகம்.

ஐ.ஏ.எஸ் விரும்பும் பாட பிரிவு எனில், என்னிலையிலும் மாறிக்கொள்ளும் தனி நபருக்குரிய பாடத்திட்டம், தனி மனித உரிமை.ஏன் அரசு கட்டுப்படுத்த வேண்டும்?.

இந்த மாணவனின் சமூக ஈடுபாடு என்னிலையிலும் சமூகவியலுக்கான சமான கல்வித் தகுதி பெற்றுத் தரும்.அதற்கான இடம் ஏன் அரசு தருவதில்லை?.

மக்களை உயர்த்தவே அரசு.கட்டுப்பாடுகள் விதித்து நடைப்பிணமாக்க அல்ல.இது போல் எத்தனையோ சம்பவங்கள் விபத்துக்களாக பதிவு பெற்று தகுந்த மாற்று நடவடிக்கைக்கு இடமில்லாமலேயே மறைகின்றன.

தன் இயல்பு வாழ்வியலோடு ஒன்றிய சமுதாய பணியில்லாமல், தனி மனிதனாக இந்த மானவன் உயர்த்தப்பட்டது தவறே.உண்டியல் ஏந்தும் போது கல்லூரி என்ன செய்தது?.பதிவுக் கட்டனம் மட்டும் பெறும் செல்ஃப் லேர்னிங்கை நடைமுறையாக்க வேண்டியது துணை வேந்தர் கடமையல்லவா?.ரத்த தானம், கண் தானம், தனி நபர் விருப்பம்.இதனை மாணவர் அமைப்பின் மூலம் செய்வது தவறு.இதற்கான களம் நாட்டு நலப்பணித் திட்டம் கிடையாது.மருத்துவமனைகள், அரசுடன் சேர்ந்து முதிர்வு பெற்ற தன்னிறைவு அடைந்த மக்களை தன்னார்வத்தில் ரத்த தானம் செய்ய முனையலாம்.எல்லா தன்னார்வ தொண்டுகளுக்கும் மாணவர்கள் இலக்காக்கப்படுவது ஏன்?.

ஆதி நாள் முதல் போராட்டங்களில் பங்கேற்று தன்னிலை, குடும்ப உயர்வு தொலைத்த மாணவர்களுக்கு அரசு சொல்லும் பதில் என்ன?.துணை வேந்தர் தன்னுடைய பணி நீட்டிப்பிற்கு தகுந்த செயல்களை தடங்கலில்லாது செய்த நிலையில் கல்வி தனி மனித உரிமைமையாக்கப்படுவதை அரசுக்கு எடுத்துச் செல்வாரா?.கற்பது கல்வி.அந்த அடிப்படை இன்றைய கல்வி முறையில் இல்லை.கற்பிப்பது கல்வி எனும்போது மாணவன் உட்படுத்தப்படுவது இல்லை.ஆசிரியரின் கற்பிக்கும் திறனுக்காண அளவு கோலாகவே மாணவன் ஆகிறான்.அவன் வாழ்க்கை முறைக்கு கல்வி பயன்படும்.ஆசிரியர் உயர்விற்கு கல்வி பயன்படும் இன்றைய நிலை எப்போது மாறும்?.
Muthukumar1 Years ago
Useless aptitude. If he spent the time properly in studies rather than his social service it would be helpful for many people rather than what he helped now.. (~20 people).
if he used his energy for studying,, the whole tamilnadu should be benefited from him.. See for example Sahayam IAS...,
usha1 Years ago
நம் கல்வி முறையை கண்டிப்பாக மாற்ற வேண்டியது அவசியம்.....
Abuthalib1 Years ago
அடடா.., நல்ல மனிதர்கள் பெரும்பாலும் கோழைகளாவே இருக்கின்றனரே..

அல்லது கோழைகளைத்தான் நல்லமனிதர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறோமோ..

புரியவில்லையே.........

ஏன் இந்த முடிவை எடுக்கின்றனர்..?

தான் நல்லவராக இருப்பதால் தனக்கு எல்லாம் தானாக கிடைக்க வேண்டும் என்று எண்ணிவிடுகிறார்களோ...

எது எப்படியோ..

சாகும் துணிவைத் தரும் இன்றைய கல்விமுறை, வழும் துணிவை ஏனோ தருவதில்லை..

இதுதான் நிதர்சனமோ..?..


-அபுதாலிப் மலேசியா
Dr.Mrs.MeenakshiPrabhakar1 Years ago
தம்பி, தங்கை உயர்விற்காக வேலைக்கு சென்ற சிறுவனை, மீட்டெடுத்து தத்தெடுத்த பிள்ளைகள் உயர்விற்காக, சக மாணவர் கல்வி கட்டனத்திற்காக உண்டியலெடுக்க வைத்தது எவ்வகையில் நியாயம்?.கடமை செய்தவனை தியாகம் செய்ய வைத்தது சமூகப்பணியா?.குழந்தை தொழிலாளிகள் என்னும் கருத்தில் உரிய மாற்றம் வர வேண்டும்.தன்னாலியன்ற சிறு உழைப்பில் தன் குடும்பத்திற்கு ஒத்துழைக்கும் சிறுவர்களின் உழைப்பு , அனுபவம் கல்வித் தகுதியாக்கப்படுவது தனி நபர் உயர்விற்கு வழி வகுக்கும்.பள்ளிக் கல்வி கட்டுப்பாடுகள் நிறந்த உலகம்.ஏட்டுக் கல்வி.செயல் தளமில்லாத நிலையில் தன்னம்பிக்கையை விலை கேட்பது.குழுத் திறனில் ஒளிந்து கொள்ளும் சூழல் தருவது.தொழில் கல்வி பயிலும் குழந்தை தொழிலாளைகள் திறன் மிகுந்தவர்கள்.தன்னம்பிக்கை அங்கே இயல்பு.வளர்க்க வேன்டியதில்லை.தாய் மண்ணில் வளரும் செடிகளுக்கு கண்காணிப்பு அவசியமில்லை.சமூக பங்களிப்பு என்று ஏழைகள் குடும்ப சூழலில் தலையிடுவது தவிர்க்கப்பட வேன்டும். நிர்வாக சீரமைப்பு செய்யப்படும் நிலையில் கல்வி தனி மனித வாழும் உரிமையாக, கல்வித் தகுதி தனி நபர் தன் திறன் கோரி அடையும் தகுதியாக கொள்ளப்பட வேண்டும்.கல்வித் தகுதி , இந்திய அரசுப் பணிக்கான தேர்வு இமாலய சாதனை அல்ல.சட்டங்களை நடை முறைப்படுத்த வகுக்கும் செயல் திட்டம்.வாழ்க்கையை ஒவ்வொரு அனுபவத்தையும் கற்றுத் தெளியும் யாரும் அரசுப் பணியில் சிறந்த பங்களிக்க முடியும்.பொதுக்கல்வித் திட்டம் ஒரு மாயை.தேர்வு முறை கல்வித் திட்டத்திற்கான சான்று.ரெக்கார்ட். நிச்சயமாக தனி மனித உயர்விற்கானது அல்ல.
Ananth1 Years ago
அவர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முன் தன் கவனத்தை மற்ற ( நல்ல) காரியங்களில் தன் கவனத்தை சிதற விட்டு விட்டார். அதனாலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார்!
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
முட்டாள்தனமான முடிவு... 'அரியர்ஸ்' விழுந்தால் என்ன குடிமுழுகியா போகப்போகிறது?... மெதுவாக எழுதி முடித்துக்கொள்வதுதானே?... அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று ஏன் நினைக்கவேண்டும்?... இவருக்குப்பிடித்தது தமிழென்றால், பொறியியல் கல்வியை விட்டுவிடவேண்டியதுதானே?!... இப்படியா உயிரை விடுவது?... இங்க, நாட்ல எத்தனையோ மானங்கெட்ட ஜென்மங்கள் எல்லாம் உயிரோடு உலாவுகிறது, அதைப்பார்த்தும்கூடவா திருந்தவில்லை?...
Ramanathan1 Years ago
அட ஆண்டவா. அவ்வளவு சிரமப்பட்டு படித்தவர், இந்த 26 தேங்கிய பாடங்களை படிக்க முடியாதா? ஏன் யாரும் பாடம் சொல்லிக் கொடுத்து உதவ மாட்டார்களா? கணிணி, இணையம், யூ டியூப் பாடங்கள் எல்லாம் வந்த பின்பு, புரியாத பாடங்களை அந்த இணைய பதிவுகளில் தெரிந்து கொள்ள முடியாதா? அவசரமாக எடுக்கப் பட்ட முட்டாள்தனம்.
sriram1 Years ago
ஏன் இப்படி எல்லம் நடக்கிரது, எவ்வலவோ சதிக்க வேண்டியவன் இபடி முடிவை தேடிக்கொண்டது வருத்ததைஅ ளிக்கிறது.
Em1 Years ago
அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டீர்களே. பொறியியல் பிடிக்கவில்லையென்றால் என்ன. உங்களுக்கு பிடித்ததைச் செய்து முன்னேறியிருக்கலாமே!

அவசரப்படாதீர்கள் இளைஞர்(ஞி)களே. எதையும் யோசித்து செயல்படத் துவங்குங்கள். அப்படித் துவங்கியதை உங்களின் முழு முயற்சியையும் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

தேர்வில் வாங்கும் மதிப்பெண் முக்கியமென்றாலும் அதுமட்டுமே உங்கள் வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. வாழ்க்கை அனுபவம், படித்தபடிப்பைவிட மிகச் சிறந்த பாடத்தைக் தரும். அதிலிருந்து கற்றுத்தேருங்கள். அதுவே வெற்றியைத் தரும்.
Ramkumar Ramachandran1 Years ago
கழிவிரக்கம்...! ஒரு ஆல மர விதை அல்பாயுசில் போய்விட்டது...!
Tamil1 Years ago
இவ்வளவு தெளிவான மணிவன்னன் தற்கொலை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது...
 Displaying 1 - 25 of 34
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices