நேற்று ரயில்... இன்று பேருந்து நிலையம்!
காட்பாடி - சேலம் பயணிகள் ரயில் தொடக்க விழா சர்ச்சை பற்றி கடந்த 1.4.12 ஜூ.வியில் 'எங்க ஏரியா உள்ளே வராதே!’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். காட்பாடி தொகுதிக்குள் அ.தி.மு.க-வினரை நுழையவிடக்கூடாது என்று தி.மு.க-வினர் அதகளம் பண்ணியதற்கு எதிர்ப்பாக, காட்பாடி அ.தி.மு.க-வினரும், அவர்கள் பலத்தைக் காட்டி விட்டார்கள். கடந்த 29-ம் தேதி காட்பாடி தொகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, தொகுதி எம்.எல்.ஏ-வான துரைமுருகனை வைத்துத் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், அ.தி.மு.க-வினர் தடாலடியாக உள்ளே புகுந்து... பஸ் நிலையத் திறப்பு விழாவை ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த தாரபடவேடு மண்டலத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான சுனில்குமார் நம்மிடம், ''சித்தூருக்கு பேருந்து நிலையம் வேண்டும். . .