''போன மாப்பிள்ளை திரும்பி வரலையே..!''
'தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை விஜயகாந்த் நிறைவேற்றவில்லை. அதுகூடப் பரவாயில்லை... தொகுதிப் பக்கம் அவரைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிப்போச்சு. இனியாவது எங்களைக் கவனிக்க அவர் வரணும்னு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) பலரும் தகவல் அனுப்பி இருந்தார்கள். ஆர்பாட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் அப்பாவுவிடம் பேசினோம். ''சட்டமன்றத் தேர்தல்ல எங்க தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். தொகுதி மக்கள் கேட்டதை எல்லாம் செய்து தருவார் என்று பிரேமலதாவும் சொன்னாங்க. ஆனால், விஜயகாந்த் எதுவுமே செய்யவே இல்லை. விருத்தாசலம் மக்களை ஏமாற்றியது போலவே எங்களையும் இப்போது அவர் கண்டுகொள்வது இல்லை. தேர்தல் முடிஞ்சதும், 'உங்க ஊர் மாப்பிள்ளையை. . .