வீடும் போச்சு... பொழைப்பும் போச்சு!
அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது, இலவச பசுமை வீடுகள். கரூரில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டம், அந்தரத்தில் நிற்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ''இந்தத் திட்டத்தின்படி கடந்த ஆண்டு, கரூர் மாவட்டத்தில் மணவாசியில் வசிக்கும் 24 திருநங்கைகளுக்கும், திருக்காம்புலியூரில் 25 நரிக்குறவ மக்களுக்கும் அவர்களின் சொந்தப் பட்டாக்களில் வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஒப்புதல் ஆணை வந்தது. அதன்படி, வீடு கட்டும் பணியும் ஆரம்பமானது. ஆனால் ஆரம்பித்த 10 நாட்களிலேயே, வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. பசுமை வீடுகள் கட்டுவதற்கான வேலையை மூன்று மாதங்களில் முடிக்கவேண்டும் என்பது அரசு ஆணை. அஸ்திவாரம் தோண்டிய நிலையிலேயே மூன்று மாதங்களாக அப்படியே கிடக்கின்றன. இந்தத் திட்டத்தை காமராஜ் எம்.எல்.ஏ. முன்னின்று நடத்தினார். அதனால் கடுப்பாகிப்போன அமைச்சர் செந்தில். . .
பக்கத்துலயா?? என்னப்பா சொல்லுரீங்க... பக்கத்துலயா? பாத்து சொல்லுங்க சரியா...