சிறைவாசியின் மனைவிக்கு வலை?
'தண்டனைக் கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது குடும்பப் பெண்களை நோட்டமிட்டு, அழகானவர்களை நோக்கி காய் நகர்த்துவது, சில சிறைக் காவலர்களுக்கு வாடிக்கை. அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜெயிலரே, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார். அதனால் ஜெயலருக்கு எதிராக தண்டனைக் கைதிகள் சிலர் சிறைக்கு உள்ளேயே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்’ என்று கடந்த 28-ம் தேதி மதுரையில் தகவல் பரவியது. உடனே விசாரணையில் இறங்கினோம். சிறைவாசிகளின் இந்த நிலை பற்றி கேசவன் என்ற வழக்கறிஞர் மதுரை கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது. அவரைச் சந்தித்தோம். 'மதுரை ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஒரு தண்டனைக் கைதியின் மனைவி பாலியல் புகார் கொடுத்தார். அப்போது டெப்டி ஜெயிலராக இருந்த தமிழ்ச்செல்வன் மூன்று வார்டன்களுடன் சேர்ந்து. . .