தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்குத் தாவிய அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் யோக.வாசுதேவன்தான் இப்போது அருப்புக்கோட்டையின் ஹாட் டாபிக். விஷயம் என்னவாம்? அரசு புறம் போக்கு நிலத்தை யோக. வாசுதேவன், தன் பெயருக்கு பத்திரம் செய்து ஆக்கிரமித்து உள்ளதாகவும் அது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு உள்ளதாகவும் பரவி வரும் செய்திதான் இதற்குக் காரணம். இது குறித்து பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தராஜனிடம் பேசினோம். ''ஆத்திப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள 18 சென்ட் நிலத்தை அப்போதைய பஞ்சாயத்துத் தலைவர் யோக.வாசுதேவன், 2006-ம் ஆண்டு தன் பெயருக்கு எழுதிக்கொண்டார். தனியாரிடம் இருந்து இந்த இடத்தை வாங்கியது போல் போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரம் போட்டுள்ளார். இப்போது அந்த இடம் மீட்கப்பட்டு உள்ளது. அது மட்டும் போதாது இதுபோன்று எங்கெல்லாம் அரசு நிலம் அனுபவிக்கப்பட்டு வருகிறது என்பதை கணக்கெடுக்க வேண்டும்.. . .
பத்திரப் பதிவு நடக்கும் போதே நிலத்தை விற்பதற்கு உரிமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், விற்பவரின் பெயரில் பட்டா இருந்தால் தான் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். இம்முறையினால் ஓரளவு போலிகளைத் தவிர்க்க முடியும்,ஆனால் செய்வார்களா?