பிரசாந்த் பூஷணுக்கு அடுத்து அச்சுதானந்தன்!
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட் டத்தின் வீரியம் குறையத் தொடங்கிய நேரத்தில், அண்ணா ஹஜாரே குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நேரில் வந்து போராட்டக் குழுவினரை சந்தித்தது, மீண்டும் சூடு கிளப்புகிறது. அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களைக் குளிர்விக் கும் வகையில் கூடங் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் 13 பஞ்சாயத் துகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசின் சார்பில் 500 கோடி ஒதுக் கப்பட்டது. இந்த நிதியின் மூலம் உடனடியாக வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும்படி மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து இரண்டு கட்டங்களாக பஞ்சாயத்துத் தலைவர்களின் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால் ஊர் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குளி உள்ளிட்ட பஞ்சாயத்துகளின். . .