இன்று... ஒன்று... நன்று...!
''கோடிக் கணக்கான வாசகர்களின் கொள்ளிடமாக இருக்கிற ஆனந்த விகடன் வாசகர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் அன்பு வணக்கங்கள்... இறைவனின் சிலையையே சிரம் தாழ்த்தவைத்த தாடகை பிராட்டியின் அன்பின் வலிமை தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்கிறேன். அறிஞர் அண்ணா ரோம் நகரில் போப்பைச் சந்தித்து போர்ச்சுக்கல் போராளி மைக்கேல் ரானடேவை விடுவித்ததைப் பற்றிய வரலாற்று உண்மையை அறிவீர்களா? அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நான் திரையிட்டுக் காட்டுகிறேன். உலகின் முதல் வழக்கறிஞர் ஒரு தமிழர் என்று யோசித்திருக்கிறீர்களா? மனிதனுக்கு மனிதாபிமானம் வேண்டும். விலங்குகளிடம் அதை நாம் எதிர்பார்க்கலாமா? மனிதாபிமானம் கொண்ட கேரளத்து யானையின் உண்மைக் கதையைச் சொல்லி உங்களை நெகிழவைக்கப்போகிறேன். உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களில் நல்ல நண்பன் யார் என்று கண்டுபிடிக்க நான் கற்றுக்கொடுக்கிறேன். இன்னும் இன்னும் நான் படித்ததை, கேட்டதை, உணர்ந்ததை உங்களிடம் பேச ஆசை. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 5.04.12 முதல் 11.04.12 வரை 044-66808034. . .