எஸ்.தேவராஜ், திண்டிவனம். 'என் உறவினர்கள் செய்த எதுவுமே எனக்குத் தெரியாது’ என்கிறாரே சசிகலா? இப்படி எதுவுமே தெரியாத சசிகலாவை தனக்குப் பக்கத்தில் வைத்திருப்பதால் ஜெய லலிதாவுக்கு என்ன பிரயோஜனம்? கிருஷ்ணன், சங்கரன்கோவில். மின் கட்டண உயர்வு பார்த்தீரா? மின்சாரமே இல்லை என்ற பிறகு, கட்டண உயர்வு பற்றி என்ன கவலை? 'பொதுமக்களுக்குக் கட்டணம் கூடிவிடக் கூடாது’ என்பதற்காகவே தாயுள்ளத்தோடு மின்சார வெட்டு அதிகரிக்கப்படுகிறது. பால் விலையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்திய முதல் அமைச்சரின் மூன்றாவது சாதனை இது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன தெரியுமா? மத்திய அரசு ரயில்வே கட் டணத்தை உயர்த்தியபோது, 'ஏழைகளைக் கணக்கில்கொள்ளாமல் கட்டணம் உயர்த்தப்பட்டது’ என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. இவரால் உயர்த்தப்பட்ட பால் விலை, பஸ் கட்டணம், மின்கட்டணம்... மூன்றையும் ஏழைகள். . .