மக்களை மடையர்களாக நினைக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில்தான் இது மாதிரி எல்லாம் நடக்கும். ஜெயலலிதா - சசிகலா நட்பு... பிரிவு... மீண்டும் நட்பு... இதைத்தான் ஞாபகப்'படுத்துகிறது’. சசிகலாவைச் சதிகாரர் என்று சொல்லிக் கட்சியைவிட்டு நீக்கியது முதல், அவர் அப்பாவி என்று மீண்டும் சேர்த்துக்கொண்டது வரையிலான 100 நாட்களும் சொல்வது ஒன்றுதான்... ஜெயலலிதாவுக்கு சசிகலா மட்டும்தான் தங்கையாக இருக்க முடியும்; சசிகலாவுக்கு ஜெயலலிதா மட்டும்தான் அக்காவாக இருக்க முடியும். 'போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்த வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவைப் பிரிந்து, அவரது வீட்டைவிட்டு வெளியே வந்து. . .