தீர்மானத்தில் சிக்கியதா இலங்கை?
தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரல் காரணமாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்தத் தீர்மானம் நிறைவேறிய விதம் குறித்தும், இந்தத் தீர்மானம் காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் டெல்லியில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இருவரிடம் கேட்டோம். உஷா ராமநாதன், (மனித உரிமையியல் ஆர்வலர் மற்றும் சட்டவியல் ஆய்வாளர்): ''தங்கள் நாட்டு மக்களை, ஒவ்வொரு நாடும் எப்படிப் பாதுகாக்கிறது என்பதை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்காணிக்கிறது. இதற்காகத்தான் 47 நாடுகள் கொண்ட ஐ.நா-வின் மனித உரிமை குழு ஏற்படுத்தப்பட்டது. எங்கு உரிமை மீறல்கள் நடந்தாலும், அது குறித்த விவரங்களை இந்த அமைப்பு கேட்கும். இதன்படியே, சர்வதேச சமுதாயம் இலங்கை மீது புகார்களை வைத்த காரணத்தாலே,. . .