பிஸினஸ் சமூகம் - நாயுடுகள்
இன்றைக்கு கோவை நகரம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் நகரமாக மாறக் காரணமாக இருந்தவர்தான் டெக்ஸ்டூல் பாலசுந்தரம். 1913-ம் வருஷம் ஆகஸ்ட் 31-ம் தேதி ஆவரம்பாளையத்தில் பிறந்தார் பாலசுந்தரம். இவரது அப்பா அந்த பகுதியில் மிகப் பெரிய மிராசுதாரர். அந்த ஊரின் மானியக்காரராகவும் இருந்தார். அவரிடம் மட்டுமே சுமார் நான்காயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. அன்றைய தேதியில் இத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதாரர்களை கோவை பகுதியில் விரல் விட்டு எண்ணிவிடலாம். பாலசுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். அண்ணன்கள் இருவரும் ஓரளவுக்குப் படித்து, விவசாயம் செய்து வந்தனர். ஆனால், பால சுந்தரத்தை மட்டும் நன்றாகப் படிக்க வைத்தார் அவரது அப்பா. பள்ளிப் படிப்பை கோவை யில் முடித்த பாலசுந்தரம், இன்டெர்மீடியட் படிப்பை சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக இங்கிலாந்தில் இருக்கும் ஷெப்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது ஷெப்ஃபீல்ட் பல்கலைக்கழகம் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிற்காக உலகப் புகழ். . .