''மனித உறவுகளைவிட பணத்திற்கே முக்கியத்துவம் என்று நினைக்கும் காலத்தில் இருக்கிறோம். பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லும் ஒருவரை விநோதமானவராக, வியப்புக்குரியவராக சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஒரு காலத்தில் பணமென்றாலே எனக்கு அலர்ஜி. பணத்தைப் பார்த்து பயந்துகூட போயிருக்கிறேன். அதை கைக்கொள்ளும் ஆவலில் நான் காணாமல் போய்விடுவேனோ என கலங்கவும் செய்திருக்கிறேன். எனினும், என் முதல் பாடலிலேயே நாணயத்தைப் பற்றி (பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் - ஒற்றை நாணயம்!) எழுத வேண்டியிருந்தது. காசுக்காகப் பாட்டெழுதலாம் என்று யோசித்த எனக்கு காசைப் பற்றி எழுதுவதற்குக் கூச்சமாகவே இருந்தது. ஆனால், அந்தக் கூச்சம்தான் இன்றைக்கு என் எல்லாக் கூச்சங்களையும் போக்கக்கூடியதாக மாற்றியிருக்கிறது. பணம் பத்தும் செய்யும்; பாதாளம் வரை பாயும் என்கிறார்கள். ஆனால், இன்று பணம். . .