''பங்குச் சந்தைக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் புதன்கிழமை இரவே சிங்கப்பூருக்குப் போகிறேன். அங்கிருந்தபடியே மெயிலில் செய்திகளை அனுப்புகிறேன்'' - வாரத் தொடக்கத்திலேயே இப்படி ஒரு டீல் போட்டிருந்தார் ஷேர்லக். ''போன் வாயேஜ்'' சொல்லி டீலை ஓகே செய்திருந்தோம். சொன்னபடி வெள்ளிக்கிழமை மாலை நமக்கு மெயிலில் செய்தி அனுப்பி இருந்தார் அவர். இனி செய்திகள்..! மும்பை பங்குச் சந்தையின் எம்.டி.யாக இருந்த மதுகண்ணன், அந்தப் பதவியிலிருந்து விலகி , டாடா சன்ஸ் நிறுவனத்தின் குரூப் ஹெட் (பிஸினஸ் டெவலப்மென்ட்) ஆகப் போகிறார். இவருக்குப் பிறகு பி.எஸ்.இ.யின் தலைமைப் பொறுப்புக்கு வரப் போகிறவர் யார் என்பது சஸ்பென்ஸ்! கண்ணனின் வருகைக்குப் பிறகு பி.எஸ்.இ.யில் பல புது புராடக்ட்கள் அறிமுகமானது. இதனால் பி.எஸ்.இ. நல்ல வளர்ச்சி கண்டது. என்றாலும்,. . .