உள்ளே வருவது சாதகமா பாதகமா?
பங்குச் சந்தைகளும் இனி தங்களின் பங்குகளை பட்டியல் இடலாம் என செபி சொல்லி இருப்பதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக். இது தொடர்பாக ஜலான் கமிட்டி கொடுத்த அறிக்கை பதினாறு மாதங்களுக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்த முடிவினால் சாதகமா, பாதகமா என்பதை அறிய சந்தையின் முக்கிய நபர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன விஷயங்களில் சாதகமானதை முதலில் பார்த்துவிடுவோம். சாதகங்கள்! பங்குச் சந்தையில் எந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டா லும் அது தரமானதா என்று பிரித்துக் காட்டச் சொல்கிறது செபி. இதன்மூலம் தரமான நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடக்கூடிய நிலை உருவாகும். எக்ஸ்சேஞ்சின் தலைவர் களுக்கு அளிக்கப்படும் மாறக்கூடிய சம்பளத்தை (Variable pay) மூன்றில் ஒரு பகுதி ஒரு ஆண்டிலும், அடுத்த பகுதி அடுத்த. . .