அடிப்படையே ஆட்டம் காண அனுமதிக்கலாமா? நமது ராணுவத்தைப் பற்றி கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைப் படித்தால் பகீரென்றுதான் இருக்கிறது. தலைநகரின் எல்லைப்பகுதியிலிருந்து புறப்பட்ட இரண்டு பட்டாலியன் ராணுவ வீரர்கள் டெல்லியை நோக்கி வந்தது மர்மமாகவே இருக்கிறது. ராணுவத்திற்குத் தேவையான லாரிகளை வாங்க தனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்ததாக ராணுவத் தளபதி வி.கே.சிங். சொன்னது இன்னொரு பெரிய சர்ச்சை. மேலும், ராணுவத்திடம் நவீன தளவாடங்கள் இல்லை என்கிற செய்திகளை எல்லாம் படிக்கும்போது, நம் நாட்டின் பாதுகாப்பு பற்றி நமக்கே பல சந்தேகங்கள் வருகிறது. உள்ளபடியே நம் நாட்டின் பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கிறதா? போபர்ஸின் குவாத்ரோச்சி போல, இன்னும்கூட சில ஊழல் பேர்வழிகள் ராணுவ அதிகாரிகளை வளைய வந்துகொண்டுதான் இருக்கிறார்களா? அல்லது. . .