மைக்ரோ எஸ்.ஐ.பி. முதலீடு: பான் கார்டு வேண்டவே வேண்டாம்!
''மைக்ரோ எஸ்.ஐ.பி. முறை மூலம் ஒருவர் ஓராண்டுக்கு 50,000 ரூபாய் வரை பான் கார்டு இல்லாமல் முதலீடு செய்யலாம். முகவரிக்கான ஆதாரம் மற்றும் புகைப்படம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த தகவல் பலருக்கும் தெரியாததால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாமலே இருக்கிறார்கள்'' என்கிறார் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆஃம்பி-யின் துணை செயல் அதிகாரி வி.ரமேஷ். மும்பையில் இருந்தபடி அவர் நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி இனி: ''இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகமாகிவிட்டது. ஆனால், அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லையே..?'' ''உண்மைதான்..! இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தற்போது மொத்தம் நான்கு கோடி ஃபோலியோ (கணக்கு) இருக்கின்றன. ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு கணக்கு வைத்திருப்பாரெனில் சுமார் இரண்டு கோடி பேர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பார்கள். இது நம் நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகிதமே. இது போதாது. இன்னும் அதிகமான வர்களை. . .