நம்பிக்கைத் தரும் டாப் ஃபண்டுகள்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டுகளில் உலகமே பிரமிக்கும் வகையில் இருக்கும் என்றும், இன்னும் 20-30 ஆண்டுகளில் நம் அண்டை நாடான சீனாவை முந்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகத்தின் முன்னணி நாடாக திகழ்வோம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபார வளர்ச்சி யின் பயனை நாம் ஒவ்வொருவரும் பெறுவதற்கு நம்முடைய முதலீடுகள்தான் அடித்தளமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கவில்லையே என்று நாம் கவலைப்படாமல் வரப்போகிற வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்த நம் முதலீட்டினை உடனடியாகத் தொடங்க வேண்டும். பல வகையான முதலீடுகள் நமக்கு இருந்தாலும் பங்குச் சந்தையின் முதலீடு எப்போதுமே பணவீக்கத்தை விட அதிக வருமானமே கொடுத்து வந்துள்ளது. ஆனால் நம்மில் பலருக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வ தற்குப் போதிய திறனும் நேரமும். . .