கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் !
பிரச்னை உலக வரைபடத்தில் இருப்பது ஓர் இந்தியா. ஆனால்... உள்ளுக்குள், பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என இரண்டு இந்தியா இருக்கிறது என்பதுதான் உண்மை. அதேபோல, தமிழகத்தில் இரண்டு பிரிவுகளை உருவாக்கியுள்ளது தமிழக மின்வாரியம். ஆம்... நகர் மின் வழங்கல் தொகுப்பு (Urban feeder)( என்கிற பெயரில் சென்னைக்கு மட்டும் 24 மணி நேர மின்சாரத்தைக் கொடுக்கும் இந்தத் துறை, கிராம மின்வழங்கல் தொகுப்பு (Rural feeder) என்கிற பெயரில் தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் நாளன்றுக்கு 6 மணி நேரம்கூட மின்சாரம் கொடுப்பதில்லை! 'காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டது... நீர் மின்சாரத்துக்கும் வழியில்லை... அதனால்தான் இந்தப் பிரச்னை' என்று சொல்லிக் கொண்டே, தாறுமாறாக மின்வெட்டுத் தாக்குதல் கிராமப்புறங்களின் மீது நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு மக்களின். . .