மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?
'வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காந்திநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அந்தப் பள்ளியே இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுகிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது. காந்தி நகர் சென்றோம். குமார் என்பவர், ''இது ரொம் பவும் பழமையான பள்ளிங்க. என்னோட ரெண்டு பசங்களும் இங்கேதான் படிக்கிறாங்க. மொத்தம் 85 மாணவர்களும் அஞ்சு ஆசிரியர்களும் இருக்காங்க. பள்ளி யில் கழிப்பிட வசதி வேண்டும் என்று போராடி, கடந்த ஆண்டுதான் கட்டப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஒரு கழி வறையும், மாணவர்களுக்கு என்று ஒரு கழிவறையும் இருக்கிறது. கழிவறை கட்டிய பிறகும் பள்ளிக்குத் துப் புரவுப் பணியாளர்ன்னு யாரையும் நியமிக்கவில்லை. 'மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதைத். . .