சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count16
save
print A+     A-
மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

'வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காந்திநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அந்தப் பள்ளியே இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுகிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது.  காந்தி நகர் சென்றோம். குமார் என்பவர், ''இது ரொம் பவும் பழமையான பள்ளிங்க. என்னோட ரெண்டு பசங்களும் இங்கேதான் படிக்கிறாங்க. மொத்தம் 85 மாணவர்களும் அஞ்சு ஆசிரியர்களும் இருக்காங்க. பள்ளி யில் கழிப்பிட வசதி வேண்டும் என்று போராடி, கடந்த ஆண்டுதான் கட்டப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஒரு கழி வறையும், மாணவர்களுக்கு என்று ஒரு கழிவறையும் இருக்கிறது. கழிவறை கட்டிய பிறகும் பள்ளிக்குத் துப் புரவுப் பணியாளர்ன்னு யாரையும் நியமிக்கவில்லை. 'மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதைத். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
பள்ளிக்கென்று தனியாக துப்புரவுத்தொழிலாளர் நியமிக்கும்வரை மாநகராட்சி துப்புரவுத்தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்யலாமே!... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... அது எங்கே இங்கே?!...
Yuva1 Years ago
வழக்கம் போல பதில். இவங்க எல்லாம் வானத்திலேர்ந்து குதிச்சத நினைச்சிக்கிறாங்களோ? போட்டோவுக்கு போஸ் குடுக்கிறதுக்கு இல்லே மேயர் பதவி. செயல்படவும் வேண்டும். யார் சொன்னா செயல்படுவீங்களோ தெரியலை.
chandra1 Years ago
''தொடர்ந்து பல்வேறு அலுவலகப் பணி இருந்தது. அதனால், உடனடியாக அந்தப் பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயல வில்லை. .....................பள்ளியின் தேவை என்ன ராக்கெட் செய்ற தொழில்னுட்பம் கற்றுகொடுக்கிற பணியா?................இவரை ஒரு நாள் கிளீன் பண்ண சொன்ன சரியாயிடும்
RadhaRangaraju1 Years ago
'அவர்களை நாங்கள் வேலை வாங்குவது கிடையாது.அவர்களாகவேதான் இழுத்துப் போட்டுச் செய்கிறார்கள்'........மேடம்,ஒரு தலைமையாசிரியை இப்படி காதில் பூ சுற்றலாமா?
Arun Kumar1 Years ago
இதில் ரெண்டு விஷயம் இருக்கு....

பிரச்சிணையின் மூல காரணம் ஒன்று, சமூக விரோதிகள் அந்த இடத்தைப் பயன் படுத்தாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இது மிக முக்கியமான விஷயம்... சமூக விரோதிகள் என்ன லன்டனில் இருந்தா குதித்து வந்துவிட்டார்கள்? பெரும்பாலும் அதே பகுதியை சேர்ந்த குடிகாரர்கள்தான் இரவில் பள்ளிக்கூடத்தை குடிப்பதற்க்காகவும், கூத்தடிப்பதற்க்காகவும் பயன்படுத்துவார்கள்...எனவே அப்பகுதி மக்கள் ஒன்று கூடி தங்களூக்குள் ஒரு முடிவெடுத்து, இரவில் பள்ளிக்குள் செல்ல தடைவிதிக்க வேண்டும்..எங்கள் ஊர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இந்த பிரச்சினை இருந்தது...இப்போது ஊர்மக்கள் கூடி ஒரு முடிவெடுத்து, இரவில் உள்ளே செல்ல முடியாதபடி கேட் போட்டு மூடிவிட்டோம்... உங்கள் பள்ளி சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருந்தால், அதில் கண்ணாடி துண்டுகளைப்பதித்து வையுங்கள்...

இரண்டாவது விஷயம், மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்ய வைப்பது... இதில் மாபெரும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை... மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கழிப்பறையை தாங்களே (சுழற்ச்சி முறையில்) சுத்தம் செய்தால் என்ன தவறு? தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமைதான் என்பதை மாணவர்களூக்கு உணர்த்த இதைவிட சிறந்த வழி இருக்கிறதா என்ன? நான் படித்தபோது எங்கள் பள்ளியை சுத்தம் செய்யும் வேலையை நாங்கள்தான் (மாணவர்கள்) செய்தோம்.....(இதற்க்கென ஒரு துப்புறவு தொழிலாலரும் இருப்பார்..அதையும் தாண்டி பெரும்பாலும் அதிக குப்பை சேர்ந்துவிடும்..) என் சி சி, என் எஸ் எஸ், சாரணர் இயக்கம் போன்றவற்றில் பணியாற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியேயும் இந்த வேலையை செய்தோம்...
ஆனால் ஆசிரியர்களின் கழிவறையை சுத்தம் செய்யும் வேலையை மாணவர்களுக்கு அளிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை....
Cavitha1 Years ago
கார்த்திகாயினி மேடத்துக்கு இந்த பள்ளியை சீர்செய்யும் வேலையில் என்ன கமிஷன் கிடைக்கும் என்று யாரும் சொல்லவே இல்லையோ?
Madras1 Years ago
Why can't these frakin' Counselors and mayor go wash the toilet taking turns.
LakshmiNarashimhan1 Years ago
மேடம் நல்லாதான் போஸ் கொடுக்கறாங்க!
Tamil1 Years ago
ஏனுங்க பங்கஜம் மேடம், நீங்க தான் கை நிறைய சம்பளம் வாங்குறீங்களே?? பசங்களை ஒதுங்க சொல்லிட்டு, நீங்களாகவே இழுத்து போட்டு செய்ய வேண்டியது தானே?? நல்லா கதை விடுறீங்களே.. உங்க வாரிசுகளை அவுங்க பள்ளியிலே இப்படி கேவலமாக வேலை வாங்கியிருந்தால், உங்க நிலை எப்படியிருக்கும் என்பதை கொஞ்சம் போல சிந்தித்து பாருங்களேன்...
சந்திரா1 Years ago
பக்கத்துல இருக்குற டாஸ்மாக்க மூடுங்கடா
Kalpana1 Years ago
சந்திரயான் விடுவதெல்லாம் இருக்கட்டும். முதலில் இளம் சந்ததியினர் படிக்க பள்ளிக்கூடங்களை ஒழுங்காக பேணி பாதுகாப்பதில்தான் இருக்கிறது தமிழகத்தின் வளர்ச்சி.
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
"தொடர்ந்து பல்வேறு அலுவலகப் பணி இருந்தது. அதனால், உடனடியாக அந்தப் பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயல வில்லை."......ஆமாம்..பேருந்து நிலைய திறப்பு விழா பொருத்து எதிர்க்கட்சிகளுடன் சண்டை.. இரயில் நிலைய துவக்க விழா மற்ற கட்சிகளுடன் மல்லுக்கட்ட நேரம்.. இதற்கே நேரம் போதவில்லை..இது போல பணிகளுக்கு நேரம் ஒதுக்கனும்னா அதில் நல்ல வரும்படி கண்முன்னே தெரியனும்ணே...
சிவா1 Years ago
'தொடர்ந்து பல்வேறு அலுவலகப் பணி இருந்ததால் உடனடியாக அந்தப் பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. பாவம் மேயர் வேள வேளைக்கு சோறு சாப்பிடுராங்களா? சொரனை இல்லாத ஜென்மங்கள்.
KRISHNADOSS1 Years ago
I can't tolerate the kids cleaning the rest rooms! Is this the future of our kids who are going to schools????????
Ramanathan1 Years ago
எந்த ஊர் வம்பென்றாலும் வரிந்து கட்டிக்கொண்டு வரும் மாணவர் சங்கங்கள் என்கே? ஸ்ட்ரைக் என்றால் மட்டும் தான் வருவார்களோ?
சிவா1 Years ago
'தொடர்ந்து பல்வேறு அலுவலகப் பணி இருந்ததால் உடனடியாக அந்தப் பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. பாவம் மேயர் வேள வேளைக்கு சோறு சாப்பிடுராங்களா? சொரனை இல்லாத ஜென்மங்கள்.
Displaying 1 - 16 of 16
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices