வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?
'கோடை வெயில் கொளுத்துவதால் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் களைப்பைப் போக்க வேண்டும்’ என்று, முதல்வர் ஜெயலலிதா தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டார். மக்கள் தாகம் தீர்ந்து விடும் என்று பார்த்தால், நிறைய புகார்கள்தான் வந்து சேர்கின்றன. ''தண்ணீர்ப் பந்தல் அமைத்து என் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார் ஆத்தூர் ஒன்றியச் செயலாளரும் மாவட்டக் கவுன்சிலருமான ரஞ்சித்குமார். அதைத் தட்டிக் கேட்ட தற்கு அடிச்சிப் போட்டுட்டுப் போயிட் டாங்க'' என்று, கலங்குகிறார் ஆத்தூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுசீலா. அவரிடம் பேசினோம். ''என்னு டைய சொந்த ஊர் ஆத்தூர் செல் லியம்பாளையம். என் வீட்டுக்காரரோட வாழப்பிடிக்காமல் தாய் வீட்டுக்கே வந்துட்டேன். எனக்கு அமுதான்னு ஒரே பொண்ணு. கூலி வேலைக்குப் போய். . .