புதுக்கோட்டையில் ஆளும் கட்சி சுறுசுறு!
சங்கரன்கோவில் சடுகுடு சப்தம் குறைவதற்குள் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்துவிட்டது! கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முத்துக்குமரன் வெற்றி பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் நல்ல பெயர் வாங்கிய எம்.எல்.ஏ-க்களில் ஒருவராக வலம் வந்தார். ஆனால், எதிர்பாராத விபத்து, அவரது மரணத்தைத் துரிதப்படுத்தி விட்டது. அதனால், தனது புதிய பிரதிநிதியைத் தேர்ந்து எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி விட்டது புதுக்கோட்டை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவு செய்யப்படும் முன்,புதுக்கோட்டைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கருப்பையாவை அறிவித்து இருந்தார் ஜெயலலிதா. அடுத்த நாளே இந்தத் தொகுதி, கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் முத்துக்குமரன் வேட்பாளர் ஆனார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாவட்டச். . .
சங்கரன்கோவில் தெர்தலின் போது சொல்ல மறைத்தவைகளை இந்த தேர்தலில் ஜுவி வெளியில் சொல்லுமா???