காந்தி லெனின், திருச்சி. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி..? சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. ராதாவின் நிலைமையும் அதுதான். பெரியாரைத் 'தலைவர்’ என்றவர் ராதா. ஆனால், அவரையே விமர்சித்து... அவருக்கு முன்னாலேயே பேசுவார். திரா விடர் கழகத்தில் இருப்பவர் போலக் காட்டிக் கொண்டார்... அவ்வளவுதான். 'காமராஜர்தான் தமிழர் தலைவர்’ என்று சொன்னார். அதற்காக, காங்கிரஸ் கட்சியை ராதா ஏற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க.வினர் சிலரைப் பிடிக்கும். ஆனால், அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு அரசியல் தேவை இல்லை என்றார். எமர்ஜென்சிக்கு எதிராகப் பலரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டபோது ராதாவும் உள்ளே இருந்தார். எமர்ஜென்சிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் வாயைத் திறக்கவில்லை. 'நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் எண்ணங்கள் உண்டு. ஆனால் கட்சி ஈடுபாடு தேவை இல்லை’ என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார். தன்னுடைய. . .